UPDATED : ஜூலை 21, 2024 05:55 PM
ADDED : ஜூலை 21, 2024 04:27 PM

சேலம்: உதயநிதியை துணை முதல்வராதை எப்படி ஆதரிக்க முடியும்? என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., எனக்கூறினார்.
லேம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக நிர்வகிக்கவில்லை. தரமான பொருட்களை வழங்காததால் தரமான உணவு வழங்க முடியவில்லை. மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், வேறு வழியின்றி ஸ்டாலின் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து நாடகத்தை நடத்தி உள்ளார்.
உண்மையான அக்கறை இருந்து இருந்தால் 3 ஆண்டுகளில் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த உணவகத்தை கவனிக்காத காரணத்தினால், மக்கள் அதிருப்தி உள்ளனர். சென்னையில் 19 உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. கஞ்சா போதையில் கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு, உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு, '' உதயநிதி துணை முதல்வராவதை எப்படி ஆதரிக்க முடியும். அவர் கருணாநிதி பேரன். ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். தி.மு.க.,வில் எத்தனையோ ஆண்டுகள் உழைத்தவர்கள் இருக்கிறார்கள்.
அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. ஏனென்றால் அது குடும்ப கட்சி. என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.