ADDED : டிச 07, 2024 06:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீமை செய்யாதீர்தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு தீங்கு விளைவிப்பது பாவம். இது குறித்து பைபிள் சொல்வதை கேளுங்கள்.
* தீமையிலிருந்து தீமை புறப்படும்.
* தீமையில் மகிழ்ச்சி அடையாது அன்பு. ஆனால் சத்தியத்தில் மகிழ்ச்சி அடையும்.
* எல்லா வகையான தீமைகளையும் நிராகரியுங்கள்.
* முட்டாளின் இதயம் தீமையின் மேல் சாய்ந்து இருக்கிறது
* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம்தான் மிஞ்சும்.
* தீமை செய்யும் ஒவ்வொருவரும்ஒளியை வெறுக்கிறார்கள்.
* மனிதர்கள் சகோதரர்களே... பிறகு ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்ள
வேண்டும்.
* கசப்பான இதயத்தில் இருந்து அக்கிரமம் தோன்றும்.
* தீமையாய் தோன்றும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.