sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வருக்கு நேரமில்லை: உதயகுமார் கேள்வி

/

முதல்வருக்கு நேரமில்லை: உதயகுமார் கேள்வி

முதல்வருக்கு நேரமில்லை: உதயகுமார் கேள்வி

முதல்வருக்கு நேரமில்லை: உதயகுமார் கேள்வி


ADDED : நவ 28, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் அளித்த பேட்டி:

தமிழகத்தில் திரும்பிய திசை எங்கும் தி.மு.க., அரசின் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். மக்கள், அரசு ஊழியர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். இதனால், தமிழகமே போராட்டக் களமாக உள்ளது.

'வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் சேதம் அடையவில்லை' என வருவாய்த் துறை அமைச்சர் கூறி இருக்கிறார். அதே நேரம் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் பயிர் சேதம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வருவாய்த் துறையில் தொடர்ந்து பணியிடங்கள் பறிபோகும் அவலம் உள்ளது. இதை சுட்டிக்காட்டி வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதற்கு தீர்வு காண முதல்வர், அமைச்சருக்கு நேரமில்லை; அக்கறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us