sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெ., ஆய்வு

/

ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெ., ஆய்வு

ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெ., ஆய்வு

ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெ., ஆய்வு


ADDED : ஆக 05, 2011 07:04 PM

Google News

ADDED : ஆக 05, 2011 07:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை சேகரிக்கும் கிடங்குகளை, ஹெலிகாப்டரில் சென்றபடி, முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும், ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக நடத்த, தமிழக அரசின் பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றி, சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளைக் கண்டறிய, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் சென்றார். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததாக, தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us