ADDED : அக் 30, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,:தீபாவளி நெரிசலை குறைக்க கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி அக்.30(இன்று), நவ.1, 2, 4, 5, 6 ஆகிய நாட்களில் காலை 9:35க்கு புறப்படும், கோவை - திண்டுக்கல் முன்பதிவற்ற சிறப்பு ரயில் போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியே மதியம் 1:10க்கு திண்டுக்கல்லை அடையும்.
மறுமார்க்க ரயில் மதியம் 2:00 மணிக்கு கிளம்பி மாலை 5:50க்கு கோவையை அடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

