sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

/

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

17


ADDED : பிப் 16, 2024 05:39 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:39 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய, 25 மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், 28, பலியானார்.

இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவரது தலைமையில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, கடந்த 10ம் தேதி, சென்னை, திருநெல்வேலி, மதுரை என, அரபிக் கல்லுாரிகள் உட்பட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், வீடுகள், அலுவலகங்கள் என, 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22, மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமும் சிக்கிய, மொபைல் போன்கள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஏற்கனவே, 14 பேர் கைதாகி சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us