sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

/

ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

16


UPDATED : ஜூலை 26, 2025 09:47 PM

ADDED : ஜூலை 26, 2025 07:14 PM

Google News

UPDATED : ஜூலை 26, 2025 09:47 PM ADDED : ஜூலை 26, 2025 07:14 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் நடக்கும் விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில், ஆடித் திருவாதிரை விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,

இன்று மாலையும் நாளையும், தமிழ்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும்.

இது குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.

துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வஉசி துறைமுகத்தின் வடக்குப் பகுதி சரக்குக் கப்பல் நிறுத்துமிடம் - III தொடங்கி வைக்கப்படும். போக்குவரத்து இணைப்பு, நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் மூன்று ரயில்வே திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மிகப்பெரிய மின் பரிமாற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இது தமிழகத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும். எனவும் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us