sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் கோவில் பெயரில் போலி இணையதளம் என புகார்

/

ராமேஸ்வரம் கோவில் பெயரில் போலி இணையதளம் என புகார்

ராமேஸ்வரம் கோவில் பெயரில் போலி இணையதளம் என புகார்

ராமேஸ்வரம் கோவில் பெயரில் போலி இணையதளம் என புகார்


ADDED : நவ 01, 2025 02:43 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி, பக்தர்களை ஏமாற்றிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.,க்கு, இணை ஆணையர் புகார் அனுப்பியுள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் புனித நீராட ஒரு பக்தருக்கு 25 ரூபாயும், தரிசனத்திற்கு 100, 200 ரூபாயும், ருத்ர அபிஷேகத்திற்கு, 3,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம், கோவில் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியுள்ளது. இதற்கு அட்மினாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மகேஸ்வரி பவன் நிர்வாகி ஹரிஷ் இருந்துள்ளார்.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த குடும்பத்தினர் போலி ஏஜென்ட் மூலம் கோவிலில் தரிசனம் செய்யவும், தங்குவதற்கும், 1.60 லட்சம் ரூபாய் செலுத்தி ராமேஸ்வரம் வந்துள்ளனர். பின், ராமேஸ்வரத்தை சேர்ந்த மணி, புகழேந்தி ஆகியோர் மூலம் போலி டிக்கெட்டில் கோவிலுக்கு நீராட சென்ற போது, ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

போலி இணையதளம் மூலம் பக்தர்களை ஏமாற்றி வரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இணை ஆணையர் செல்லதுரை, எஸ்.பி., சந்தீஷுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us