sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பணியிட பாலியல் தொல்லை; தடுக்க புகார் குழுக்கள்

/

பணியிட பாலியல் தொல்லை; தடுக்க புகார் குழுக்கள்

பணியிட பாலியல் தொல்லை; தடுக்க புகார் குழுக்கள்

பணியிட பாலியல் தொல்லை; தடுக்க புகார் குழுக்கள்

5


ADDED : பிப் 18, 2024 06:35 AM

Google News

ADDED : பிப் 18, 2024 06:35 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க, அனைத்து மாவட்டங்களிலும், உள்ளூர் புகார் குழுக்கள் இயங்குவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ல் இயற்றப்பட்டது. பஞ்சாலைகள், நுாற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதால், அனைத்து மாவட்டங்களிலும் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அனைத்து மாவட்டங்களிலும், உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, இயங்கி வருவதாகவும், மாவட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த குழுக்கள், புகார்களை பெறுவதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனங்களில், 10 பேருக்கு மேல் பணியாற்றினால், உள்விசாரணைக் குழு அமைக்க, அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை, மார்ச் 22க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.






      Dinamalar
      Follow us