sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை

/

போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை

போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை

போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை


ADDED : ஜூலை 20, 2011 05:41 AM

Google News

ADDED : ஜூலை 20, 2011 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:போலீசார் மீதான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க வசதியாக ,விருதுநகர் மாவட்ட ஸ்டேஷன்களில் புகார் பெட்டி வைக்க , நஜ்மல் கோதா எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.போலீஸ் ஸ்டேஷன்களில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தும் ,சில போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது உண்டு.

இதனால் ஏற்படும் கட்டப்பஞ்சாயத்து, சமாதனம் போன்றவற்றை தடுப்பதற்காகவும், போலீசார் சிலர் மது அருந்தியப்படி போதையில் வேலை செய்வதை கண்டறியவும், தீவிரவாதிகள் நடமாட்டம், நாச வேலைகள் குறித்து நேரடியாக கூற முடியாதவர்கள் புகார் கூற வசதியாக ,ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்பெட்டி வைக்க, விருதுநகர் நஜ்மல் கோதா எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,'' இதன் புகார் பெட்டியை, எஸ்.பி., போலீசாரே தினமும் திறந்து, மனுக்களை எடுத்து என்னிடம் கொடுப்பர். அதன்படி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 54 ஸ்டேஷன்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us