sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தை

/

முதல்வர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தை


UPDATED : டிச 03, 2025 02:53 PM

ADDED : டிச 03, 2025 02:44 PM

Google News

UPDATED : டிச 03, 2025 02:53 PM ADDED : டிச 03, 2025 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் அமைத்துள்ள 5 பேர் கொண்ட குழு இன்று (டிச.,03) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியது. ''இண்டி கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகப்பெரிய உதாரணம்'' என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை, காங்கிஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று (டிச.,03) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர். பின்னர் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது: காங்கிரஸ் மேலிடம் ஒரு குழு அமைத்து இருந்தார்கள்.

இந்த குழு இன்று மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறது. அவர்கள் குழு அமைத்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். கிழக்கா? மேற்கா? தெற்கா? வடக்கா என உங்களுக்கு சந்தேகம் இருந்தது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இண்டி கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகப்பெரிய உதாரணம். திமுக- காங்கிரஸ் 4,5 தேர்தலில் வெற்றி கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து பொறுந்திருந்து பாருங்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.






      Dinamalar
      Follow us