ADDED : ஏப் 16, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை விவகாரம் தொடர்பாக, சோனியா, ராகுல் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சாஸ்திரி பவனில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களை எதிர்க்க நேருவால் துவக்கப்பட்டது, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை. இது நலிவடைந்துள்ள நிலையில், அதை மீட்க காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்து உதவியது. ஆனால், சோனியா, ராகுல் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.