sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி

/

சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி

சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி

சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி


ADDED : செப் 08, 2025 02:30 AM

Google News

ADDED : செப் 08, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: 'தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்' என திருநெல்வேலியில் நடந்த காங்., மாநாட்டில் கட்சியின் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் பேசினார்.

மாநாட்டில், அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நடக்கும் இந்த காங்கிரஸ் மாநாட்டின் வாயிலாக, தேசிய அளவில் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை சொல்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் 22,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ராகுலிடம் நான் கூறுகையில், 'நீங்கள் தமிழகத்திற்கு சென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் 22,000 கிராமக் கமிட்டியில் உள்ள 2 லட்சம் உறுப்பினர்களையும் சந்திக்கலாம்,' என தெரிவித்தேன்.

ராகுலும், கட்சியின் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவும் தமிழகத்திற்கு வந்து கிராமக் கமிட்டியினரை நேரில் சந்திப்பதாக கூறினர்.

தமிழகத்தில் 117 சட்ட சபை தொகுதிகளை குறி வைத்து பணி செய்வோம். தேர்தலில், 125 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்கான தொகுதிகளை தயார் செய்யுங்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடக்கிறது. இந்த ஓட்டு திருட்டை ராகுல் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தார்.

இவ்வாறு கிரிஷ் சோடங்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us