sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

/

95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

21


ADDED : மார் 27, 2025 06:00 AM

Google News

ADDED : மார் 27, 2025 06:00 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில், 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன,'' என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், கோவில்கள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவருக்கு பதிலளித்த, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ''மேட்டூர் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு, 1.20 கோடி ரூபாய் செலவில், மூன்று நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆணையருடைய பொது நல நிதியை பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

''அதிக வருவாய் உள்ள வேறு கோவிலில் இருந்து கடனாக பெற்று, ராஜகோபுரம் அமைக்கும் பணி வெகு விரைவில் துவங்கப்படும். ''இந்த ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

''அது மட்டுமின்றி, 350 ராஜகோபுரங்களுக்கான மராமத்து பணிகள், 83 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. ''மேட்டூர், மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகள், 4 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. ஜூலை மாதம் கும்பாபிேஷகம் நடத்தப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us