இலங்கை மீண்டும் அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 32 பேரை பிடித்து சென்றது
இலங்கை மீண்டும் அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 32 பேரை பிடித்து சென்றது
ADDED : ஆக 08, 2024 06:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழகத்தின் நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்நிலையில் பாம்பனில் இருந்து சென்று மன்னார் தென் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 32 மீனவர்களையும் 4 நாட்டுப்படகுகளுடன் கைது செய்து கடல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.