sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

/

தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

20


ADDED : மே 03, 2024 01:57 PM

Google News

ADDED : மே 03, 2024 01:57 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று (மே 3) காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரியில், திருப்பூர், ஈரோடில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இன்று காலை 9:28 முதல் 9:48 மணி வரை சிசிடிவி ஆப் ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us