sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கான்ட்ராக்ட் நிறுவனங்கள் 'கல்தா'

/

கான்ட்ராக்ட் நிறுவனங்கள் 'கல்தா'

கான்ட்ராக்ட் நிறுவனங்கள் 'கல்தா'

கான்ட்ராக்ட் நிறுவனங்கள் 'கல்தா'


ADDED : ஆக 22, 2025 09:32 PM

Google News

ADDED : ஆக 22, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் துறையினர் கூறிய தாவது:

ஏப்ரல் துவங்கி அக்டோபர் வரை காரீப் சீசன், செப்டம்பர் துவங்கி, பிப்ரவரி வரை ராபி சீசன். இரு வேறு கட்டங்களிலும் டிஜிட்டல் பயிர் சர்வே செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் தான், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெற முடியும். இந்நிலையில், பயிர் சர்வே பணிக்கு தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் ஆட்களை ஏற்பாடு செய்யாததால், வேளாண் துறையினரை இப்பணியை செய்து முடிக்க வேண்டும் என்று, உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.

முழு நேரமும் இந்த பணியை செய்வதால், துறை சார்ந்து தினசரி மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, களப்பணியில் ஈடுபடும் வேளாண், தோட்டக்கலை துறையினரே, தங்களுக்கு தெரிந்த விவசாய குடும்பத்தில் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, டிஜிட்டல் பயிர் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்த, உயரதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால், இந்த வேலை நிரந்தரமில்லை எனக்கருதி, யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வேளாண், தோட்டக்கலை கள அலுவலர்களை உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.

மாறாக, 'கான்ட்ராக்ட்' டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us