sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்

/

ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்

ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்

ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்


ADDED : டிச 28, 2024 07:49 PM

Google News

ADDED : டிச 28, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக, ஒப்பந்த முறையில் தி.மு.க., அரசு நியமனம் செய்து வருகிறது. இது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும்.

ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டித் தருகிறது. இந்தப் பணிகள் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை கண்காணிக்கும் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் நிரந்தர பணியில் இருப்பர்.

ஆனால், இந்த பணிகளையும் ஒப்பந்த முறையில் நிரப்ப, தி.மு.க., அரசு முயற்சிப்பது சமூக நீதிக்கு எதிரானது.

அரசின் ஒப்பந்த பணிகளை கண்காணிக்கும் பொறியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக இருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்






      Dinamalar
      Follow us