sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல்

/

அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல்

அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல்

அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல்

1


ADDED : மே 24, 2025 11:39 PM

Google News

ADDED : மே 24, 2025 11:39 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் கொள்ளையை ஆய்வு செய்ய, கலெக்டர்களுக்கு 'சம்மன்' அனுப்பினால், மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு; கனிமவள கொள்ளையை ஆய்வு செய்யச் சென்றால், மாநில சுயாட்சியில் தலையீடு; டாஸ்மாக் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றால், மனித உரிமை மீறல்;

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டுமெனில், ஹிந்தி திணிப்பு என, வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் தி.மு.க., அரசு, ஒவ்வொரு விஷயத்துக்கும் மோசடியாக அரசியல் செய்தே, நான்கு ஆண்டுகளை கழித்து விட்டது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும், எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறைந்தது ஒரு துறையிலாவது, அமலாக்கத் துறை விசாரித்து நியாயம் பிறக்குமா என்று தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த நிலையில், அதற்கும் உச்ச நீதிமன்றத்தால் தடை வந்துள்ளது.

நீதிமன்றத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளை தீர்ப்பு போல சித்தரித்து, கபட நாடகம் ஆடி, சுய விளம்பரம் தேடிக்கொள்கிறது, தி.மு.க., அரசு.

- கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்






      Dinamalar
      Follow us