இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு
ADDED : டிச 05, 2024 04:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: உடல்நலம் நலம் பாதித்த கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்தது அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (68). உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட அவரின் மனைவி அங்காளம்மை சோகத்தில் இருந்தார். தொடர்ந்து, துக்கம் தாங்க முடியாமல் அவரும் உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்தது இப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.