sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை ஐகோர்ட்டில் உள்ள கல்லறைகள் அகற்ற கோரிய வழக்கில் கோர்ட் நோட்டீஸ்

/

சென்னை ஐகோர்ட்டில் உள்ள கல்லறைகள் அகற்ற கோரிய வழக்கில் கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில் உள்ள கல்லறைகள் அகற்ற கோரிய வழக்கில் கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில் உள்ள கல்லறைகள் அகற்ற கோரிய வழக்கில் கோர்ட் நோட்டீஸ்


ADDED : செப் 20, 2025 02:28 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்கள் கல்லறைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், 1687ம் ஆண்டு முதல், கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்த ஏலின் மகன் டேவிட் ஏலின் மற்றும் அவரது நண்பர் ஜோசப் ஆகியோரின் 300 ஆண்டு பழமையான கல்லறைகள் உள்ளன.

அந்த இடத்தில் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட மற்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே புதிய கட்டுமானங்களுக்கு இடையூறாக இருக்கும் கல்லறைகளை அகற் றக் கோரி வழக்கறிஞர் ம னோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்லறைகளை அகற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து மோகன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு மீது மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறை அடுத்த நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us