sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு

/

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு


ADDED : நவ 04, 2025 06:41 AM

Google News

ADDED : நவ 04, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்த, 79.40 லட்சம் பேர் குறித்து, போலீசார் விசாரணை செய்ததில், 32,985 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தி, தங்களின் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

இதற்காக அவர்களுக்கு, 'எம் பாஸ்போர்ட்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிக்கு கையடக்க கருவியும் வழங்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை வரை, மாநிலம் முழுதும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்த, 79.40 லட்சம் பேர் குறித்து, போலீசார் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 32,985 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நுண்ணறிவு போலீசார் கூறுகையில், 'போதை பொருள் கடத்தல்காரர்கள், வெவ்வேறு யுக்திகளை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us