sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்டப்பெயர் கூடாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

/

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்டப்பெயர் கூடாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்டப்பெயர் கூடாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்டப்பெயர் கூடாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ADDED : மார் 09, 2024 01:29 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு, பட்டப்பெயர் சூட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்' என, போலீசாருக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 27. இவர், 2022 ஜூலை 14ல் வழிப்பறியில் ஈடுபட முயன்றதுடன், தடுக்க வந்த பொதுமக்களை கற்களை கொண்டு தாக்கியதாகக் கூறி, அரும்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

'பெயர்' என்பது, நம் அடையாளத்தின் முக்கிய பகுதி. தனிப்பட்ட, கலாசார, குடும்ப, வரலாற்று தொடர்புகளை ஆழமாக எடுத்து செல்பவை பெயர்கள். நாம் யார், சார்ந்திருக்கும் சமூகம் என்ன, உலகில் நம் இடம் என்ன என்பன போன்றவற்றை, நமக்கு உணர்த்துகின்றன.

பெயரை மாற்றுவது என்பது, தனிப்பட்ட ஒருவரின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார், கண்ணியக் குறைவான பெயர்களை சூட்டக்கூடாது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரை, 'குரங்கு' சரவணன் என, எப்.ஐ.ஆர்., என்ற, முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, பட்டப்பெயர் வைப்பது, சூட்டுவது என்பது, அவர்களின் மனித உரிமையையும், அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையையும் மீறுவதாக அமையும்.

எனவே, இதுபோல அடைமொழிகளை வைத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அழைக்கும் நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும்; அதற்கான உரிய அறிவுறுத்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரால், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இச்சம்பவத்துக்கு, தனிப்பட்ட சாட்சி ஒருவர் கூட இல்லை. வீசப்பட்ட அந்த கற்களால், ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும், 1 செ.மீ., அளவு கூட இல்லாத இரண்டு கற்களை பயன்படுத்தி கூட்டத்தை அச்சுறுத்தினார் என்ற கதையை, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.

ஏன், அந்த கற்களை கொண்டு ஒரு காக்கையை கூட, அச்சுறுத்தி விரட்ட முடியாது. எனவே, இந்த வழக்கில் அரசு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட சரவணன் விடுதலை செய்யப்படுகிறார். வழக்கு ஆவணங்களில் இருந்த, 'குரங்கு சரவணன்' என்ற வார்த்தையும் நீக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us