கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்: சீமான்
கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்: சீமான்
ADDED : அக் 27, 2024 11:21 AM

சென்னை: 'கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
த.வெ.க., மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் குறித்து,சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் என்பது கட் அவுட் வைப்பது அல்ல, கருத்தியலே அரசியல். நீங்கள் வேலுநாச்சியார், அம்பேத்கர் ஆகியோரை கட் அவுட்டில் வைப்பது முக்கியமில்லை. அவர்களது புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
நாங்கள் கட்சி கொடியில் புலி வைத்துள்ளேன். விஜய் யானையை வைத்துள்ளார். கூட்டணி குறித்து தம்பி தான் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் கட்சியை துவ்ஙகும் போது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நான் வரும் போதும், இவ்வளவு ஆதரவு இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
நீங்க கவலைப்படாதீங்க!
த.வெ.க., மாநாட்டிற்கு செல்லும் கூட்டம் விஜய்-ஐ பார்ப்பதற்காக தான். இந்த மக்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சீமான் அளித்த பதில்: சாக போகிறோம் என தெரிஞ்சிருச்சு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக நகர்த்துகிறீர்கள்.
விடுங்கள். அவரை பார்ப்பதற்கே கூட்டம் வரட்டும். கூட்டம் வருது, வரவில்லை அதை பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.