sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

/

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

5


ADDED : ஏப் 27, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:36 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக சைபர் கிரைம் போலீஸ் பிரிவு பெயர் மற்றும், 'லோகோ'வை பயன்படுத்தி, போலி சமூக வலைதள கணக்குகள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக காவல் துறையின், 'சைபர் கிரைம்' பிரிவு, பொது மக்களுக்கு, 'டிஜிட்டல்' பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இப்பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான கணக்குகள், பொது மக்களிடையே குழப்பத்தை உருவாக்குவது மட்டுமின்றி, நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. இது, பொதுமக்களை தவறாக நடத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், டிஜிட்டல் பாதுகாப்புக்கான அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

தற்போது, 10 போலி இன்ஸ்டாகிராம், 4 'எக்ஸ்' தள கணக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக, '@tncybercrimeoff' மட்டுமே உள்ளது. மற்ற கணக்குகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us