ADDED : ஜூலை 31, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை:
எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கம், ஆக., 1 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது.
இதன்படி, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். அதனால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்.