அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு
ADDED : ஆக 07, 2024 12:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அதிமுக எம்எல்ஏ.,க்கள் திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். இதனால் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்எல்ஏ.,க்கள், திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக அப்பாவு பேசியிருந்தார். இதனையடுத்து பாபு முருகவேல் என்பவர், அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, அவதூறு வழக்கில் செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை செப்.,9க்கு ஒத்திவைத்தது.