sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

/

அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

2


ADDED : மார் 24, 2025 06:24 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:24 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அவதுாறாக பேசிய பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.

பழனி பெரியப்பா நகரைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் சில நாட்களுக்கு முன், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைதுரை மனைவி குறித்து அவதுாறாக பேசிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்த வீடியோ பரவியது.

இதையறிந்த எல்லைதுரையின் மனைவி புவனேஸ்வரி, பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதுாறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்தனர்.

விசாரணைக்காக, அவரை தாலுகா ஸ்டேஷனுக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தபோது, அங்கு பா.ஜ.,வினர் திரண்டனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் கதவுகள் அடைக்கப்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us