sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

/

" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

59


UPDATED : ஜூலை 21, 2024 07:55 AM

ADDED : ஜூலை 20, 2024 12:10 PM

Google News

UPDATED : ஜூலை 21, 2024 07:55 AM ADDED : ஜூலை 20, 2024 12:10 PM

59


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ‛‛ எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கபோவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது'' எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவிதான் என அமைச்சர் உதயநிதி பேசினார்.

தி.மு.க., இளைஞரணியின் 45ம் ஆண்டு துவக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது. இதில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி பேசியதாவது:

மோடிக்கு வெற்றி கிட்டாது


இந்த முறை, 2 அல்லது 3 தொகுதிகளை பிடித்து விட வேண்டும் என்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி 6,7 முறை வந்தார். அவர் ஆயிரம் முறை வந்தாலும், வெற்றி கிடைக்காது என்று சொன்னேன். அதை மக்கள் உண்மை ஆக்கி உள்ளனர். பிரதமர் பிரசாரம் செய்தும் பா.ஜ.,விற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 40 தொகுதிகளிலும் ‛ இண்டியா' கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். வெற்றிக்கு இளைஞரணியும் காரணம். பா.ஜ., பொய்களை பரப்பி அரசியல் செய்கின்றனர்.

மறக்க மாட்டேன்


இங்கு பேசியவர்கள் எல்லாம் துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றியாக சொன்னீர்கள். பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. வதந்திகளை படித்து விட்டு , இது நடக்க போகுதோ, என்று பலர் கோல் போடுகிறீர்கள், துண்டு போடுகிறீர்கள். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் . எவ்வளவு பெரிய பதவி வந்தாலும் , பொறுப்பு வந்தாலும் இளைஞரணி தான் எனது மனதிற்கு நெருக்கமானது. இளைஞரணியை மறக்க மாட்டேன்.

முக்கியம்


லோக்சபா, விக்கிவராண்டி தேர்தலுக்கு உழைத்தோமோ அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் உழைக்க வேண்டும். பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்ட முடிவிற்கு பின்னர் நிருபர்கள் துணை முதல்வர் குறித்து கேள்வி கேட்டபோது; பொறுப்பு மாற்றம் குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றார்.






      Dinamalar
      Follow us