sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

/

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

7


ADDED : டிச 11, 2025 05:17 PM

Google News

7

ADDED : டிச 11, 2025 05:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : வீட்டு மனை அங்கீகாரம் தருவதற்கு ரூ.50,000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., இளங்கோவன் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார்.

அந்த இடத்திற்கு உள்ளாட்சி அனுமதி பெற கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., அன்புக்கண்ணனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை 49, தொடர்பு கொள்ள கூறியுள்ளார். இளங்கோவனை சந்தித்து விவரம் கேட்ட போது, ஒரு வாரம் கழித்து வர கூறியுள்ளார். பின்பு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, 'உங்க பைல் ரெடி செய்ய, எனக்கும், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ரூ. 1,00,000 லஞ்சம் தர வேண்டும்' என்று கேட்டுள்ளார்.

நேற்று( டிச.,10) காலை இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, அவர் ஏற்கனவே கூறியது போல், இன்று (டிச.,11) 50,000 ஆயிரம் ரூபாயும், மீதி பணம் ரூ. 50,000 ஆயிரம், வரும் வெள்ளிக்கிழமை கொடுக்கவும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல், மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.50,000 ஆயிரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us