sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது

/

ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது

ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது

ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., கைது


ADDED : டிச 05, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 05, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா புளியங்குடியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு பணத்தை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., பால்பாண்டியை 58, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி கிராமத்தில் அருந்ததியர் காலனியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கும் பணியை ஒப்பந்தாரர் முடிந்துள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் ஏற்கனவே விடுவிக்கப் பட்டுள்ளது. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை பி.டி.ஓ., பால்பாண்டியனிடம் மீதி தொகையை விடுவிக்குமாறு ஒப்பந்ததாரர் கேட்டார். அப்போது பால்பாண்டி ரூ.3000 தனக்கும், ரூ.2000 அலுவலக செலவிற்கும் வழங்குமாறு கூறினார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.5000த்தை முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., பால்பாண்டியனிடம் ஒப்பந்ததாரர் கொடுத்தார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராமசந்திரன் தலைமையிலான போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us