sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'சாப்ட்வேர்' மாற்றினாலும் 'சர்வர்' பிரச்னை தொடருது : பத்திரப்பதிவு பணி சுணக்கம்

/

 'சாப்ட்வேர்' மாற்றினாலும் 'சர்வர்' பிரச்னை தொடருது : பத்திரப்பதிவு பணி சுணக்கம்

 'சாப்ட்வேர்' மாற்றினாலும் 'சர்வர்' பிரச்னை தொடருது : பத்திரப்பதிவு பணி சுணக்கம்

 'சாப்ட்வேர்' மாற்றினாலும் 'சர்வர்' பிரச்னை தொடருது : பத்திரப்பதிவு பணி சுணக்கம்


ADDED : பிப் 03, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 03, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

பதிவுத்துறை இணையதளத்தில், 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' இணைக்கப்பட்ட பின்னும், 'சர்வர்' பிரச்னை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, 590 சார் - பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பத்திரப்பதிவுக்கான இணையதளத்தில், 'ஸ்டார் 2.0' மென்பொருளுக்கு பதிலாக, மேம்படுத்தப்பட்ட 'ஸ்டார் 3.0' மென்பொருள் உருவாக்கப்பட்டது.

இந்த புதிய மென்பொருள் பயன்பாட்டை, ஜன., 22ல், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பத்திரங்களை காகிதமில்லா முறையில் பதிவு செய்ய, இதில் வசதி செய்யப்பட்டது.

தற்போது, இந்த புதிய சாப்ட்வேர் இணைக்கப்பட்ட நிலையிலும், பதிவுத்துறை இணையதள சர்வரின் வேகம் அதிகரிக்கவில்லை. எப்போதும் போலவே இந்த சர்வர் இயங்குவதால், பத்திரப்பதிவு பணிகள் சுணங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில்,''பதிவுத்துறை இணையதளத்தில் பெரிய அளவிலான சாப்ட்வேர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளின்போது பிரச்னை ஏற்படுவது வழக்கம். இருப்பினும், இது தொடர்பான விஷயத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பதிவாகும் பத்திரங்களின் எண்ணிக்கை குறையவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us