ADDED : ஜன 26, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம் அமாவாசை வழிபாட்டிற்கு நாளை (ஜன.,27) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.
இக்கோயில் நாளை (ஜன.,27) பிரதோஷ வழிபாடு ஜன.,29ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக நாளை முதல் ஜன.,30 வரை 4 நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர்.
எதிர்பாராமல் கனமழை பெய்தால் மட்டுமே பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.