sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

/

மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

6


ADDED : ஜூன் 18, 2024 03:55 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 03:55 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : ''லோக்சபா தேர்தலில் மகளிர் உரிமை தொகையை நிறுத்தி விடுவோம் என வாக்காளர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் தான் தி.மு.க., கூட்டணி 40 இடங்களில் வென்றது,'' என, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் சாடினார்.

அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகம், பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் முயற்சியை தேசிய ஜனநாயக கூட்டணியினர் தடுத்து பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெற முயற்சிப்போம். இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பயந்து பின்வாங்கியுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக 37 எம்.பி.,க்கள் இருந்தும் தமிழக பிரச்னைகளை தி.மு.க., கூட்டணி சரி செய்ய முடிந்ததா. தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்., கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தின் முக்கியமான காவிரி பிரச்னையை தீர்க்க முடிந்ததா. மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநிலம் கூறி வருகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்.

தமிழகத்தில் ஓட்டுக்களை வாங்க காங்.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இது நேர்மையான வெற்றி கிடையாது.

2026 சட்டசபை தேர்தலில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. 2011 ல் தி.மு.க., மண்ணை கவ்வியதுபோன்றே, 2026 தேர்தலில் நடக்கும். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் 'பி' அணியாக செயல்பட்ட அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, தோல்வி பயத்தால் தான் இடைதேர்தலில் நிற்கவில்லை. தென் மாவட்ட 9 தொகுதிகளில் அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிந்துள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us