ADDED : ஜன 18, 2024 01:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்(34).
தோனியின் தீவிர ரசிகரான இவர் நேற்று இரவு அரங்கூர் கிராமத்திலுள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் அவரது உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கோபிகிருஷ்ணன் இறந்த தகவலறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். கோபிக்கு அன்பரசி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.