ADDED : ஆக 31, 2011 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு பகுதியில், மிளா மான்கள் அதிகமாக உள்ளன.
இவைகள் செந்நாய்களிடம் சிக்குவதாலும், வேட்டையாடப்படுவதாலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கன்னிமலை எஸ்டேட் பகுதியில், இரண்டு மிளா மான்கள், செந்நாய்களிடம் சிக்கி இறந்தன. நேற்று கொரண்டிக்காடு பகுதியில், மிளா மான் குட்டியை செந்நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தது. தப்புவதற்காக, ஓடையில் குதித்த குட்டியை தண்ணீர் அடித்துச் சென்றது. இதைக்கண்ட மக்கள், மான் குட்டியை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மானிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.