தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்

 அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்

 அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்


ADDED : பிப் 01, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசு சார்பில் நடந்த, குடியரசு தின விழாவில், அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளில், சிறந்த ஊர்திகளுக்கும், கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவியருக்கும், பரிசுகள் அறிவிக்கப்படாதது, அலுவலர்கள் மற்றும் மாணவியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கொண்டாடப்படுகிறது.

கலைநிகழ்ச்சி விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், அரசு துறைகளின் சாதனைகளை விவரிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கும். சிறப்பாக கலை நிகழ்ச்சி நடத்திய மாணவியருக்கும், சிறந்த அலங்கார ஊர்திகளுக்கும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.

விழா முடிந்து, மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில், கவர்னர் பரிசுகளை வழங்கி கவுரவிப்பார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதனால், தேநீர் விருந்தில் பங்கேற்பதை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இது, குடியரசு தின விழாவிலும் எதிரொலித்தது. விழாவில் இருவரும் பங்கேற்றாலும், முகம் கொடுத்து பேசிக் கொள்ளவில்லை.

இந்நிலையில், கலை நிகழ்ச்சி நடத்திய மாணவியரில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர், அலங்கார ஊர்திகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த துறைகள் விபரம் அறிவிக்கப்படவில்லை.

இது, அலங்கார ஊர்தி தயார் செய்ய, பல நாட்கள் உழைத்த துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவியரும், ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

இடம்பெறவில்லை இது குறித்து, பொதுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அலங்கார ஊர்திகளுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், கவர்னர் பரிசு வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு கவர்னரின் நிகழ்ச்சி நிரலில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறவில்லை.

எனவே, முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதேபோல, இந்த ஆண்டுக்கான பரிசும் முதல்வரால், விரைவில் வழங்கப்படும். அப் போது, போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us