sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருதுார் அணையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

/

மருதுார் அணையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மருதுார் அணையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மருதுார் அணையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு


ADDED : பிப் 23, 2024 02:38 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறை மாணவர்கள், 24 பேர், துறைத்தலைவர் சுதாகர், பேராசிரியர்கள் மதிவாணன், முருகன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆகியோருடன் தொல்லியல் சின்னங்களை பார்வையிட சென்றனர்.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கேவுள்ள மருதுார் தடுப்பணையில் மாணவர்கள் ஆய்வு செய்ததில், 716 ஆண்டுகளுக்கு முந்தைய, குலசேகரபாண்டிய மன்னன் காலத்திய கல்வெட்டை கண்டறிந்தனர்.

அந்த கல்வெட்டில், மண்டபம் நிறுவப்பட்டதற்கான குறிப்பு உள்ளது. 1500ல் இந்த அணையை கட்டும்போது பழைய மண்டப கற்களை பயன்படுத்தியிருக்கலாம். அதில் ஒன்று தான், கல்வெட்டு இடம்பெற்றுள்ள இந்த கல்வெட்டு என, மாணவர்கள் தெரிவித்தனர்.

கல்வெட்டை கண்டுபிடித்த மாணவர் ராகுல்கிருஷ்ணாவை பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us