sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டர் சட்டம் பாயும்

/

மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டர் சட்டம் பாயும்

மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டர் சட்டம் பாயும்

மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டர் சட்டம் பாயும்

3


ADDED : ஏப் 27, 2025 01:46 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:46 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது, குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சட்டசபையில் நேற்று தாக்கலான மசோதா விபரம்: தமிழகத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் உள்ளிட்டோரின் வீடியோ திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், 1982ம் ஆண்டு தடுப்பு காவல் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், அண்டை மாநில உயிரி மருத்துவக் கழிவுகளை குவிப்பது, சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நம் மாநிலத்திற்குள் அத்தகைய கழிவுகளை கொட்டுவது குறித்து, அடிக்கடி புகார்கள் எழுப்பப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், 'மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, 1982ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து வழக்குப்பதிவு செய்ய, இதுவே சரியான நேரம்' என்று கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, 1982ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில், சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். அதற்கேற்ப, தமிழக சட்டம் 1982ல் திருத்தம் செய்வது என, அரசால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us