sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது

/

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது

14


ADDED : டிச 15, 2025 09:26 PM

Google News

ADDED : டிச 15, 2025 09:26 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : ஆசிரியையிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலரான லதா பேபி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். ஜூலை மாதத்தில், வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்ற மணப்பாறையை சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியைக்கு, நான்கு நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. அதை பெறுவதற்காக, லதா பேபியிடம் கடிதம் கேட்டதற்கு, அவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

விமலா, திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். போலீசார் அறிவுரையின்படி, திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், விமலாவிடம், லஞ்சப்பணத்தை வாங்கிய லதா பேபியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us