sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?

/

போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?

போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?

போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?


ADDED : செப் 20, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழகத்தில், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வாய்ப்பு உள்ளதா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையில் குடிசை வாசிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை' என்று கூறப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அட்வகேட் கமிஷனரை நியமித்தது. அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள், இந்த பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாக கூறப்பட்டது.

இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலும், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை போதுமானது அல்ல.

'திருப்திகரமான நடவடிக்கைகள் இல்லையென்றால், இந்த பிரச்னையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டியது வரும்' என, கூறியிருந்தது.

வழக்கு, முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினர். போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்ளதாகவும், கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி, இந்த குழுவை கண்காணிப்பார் என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட மற்றும் தாலுகா அளவில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வாய்ப்புள்ளதா என, முதல் அமர்வு கேள்வி எழுப்பியது. இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தது.






      Dinamalar
      Follow us