sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் அம்பி...! சீமானை 'கலாய்த்து' தள்ளிய பிரேமலதா

/

கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் அம்பி...! சீமானை 'கலாய்த்து' தள்ளிய பிரேமலதா

கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் அம்பி...! சீமானை 'கலாய்த்து' தள்ளிய பிரேமலதா

கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் அம்பி...! சீமானை 'கலாய்த்து' தள்ளிய பிரேமலதா

16


ADDED : நவ 04, 2024 04:13 PM

Google News

ADDED : நவ 04, 2024 04:13 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அம்பியாகவும், திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார் என்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜயும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். வருங்காலம் நிறைய உள்ளது.

அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முன் எடுத்து செல்லும் நிகழ்வுகள் குறித்தே எதையும் கூறமுடியும்.

அப்போது நடிகர் விஜயின் த.வெ.க., பற்றியும், விஜயை சீமான் விமர்சித்தது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, அவர்(சீமான்) திடீர் என்று அந்நியனாக மாறுவார், திடீர் என்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது.

ஏன் விஜயை தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு இறப்பார் என்று சொன்னார் என்று அவர்(சீமான்) தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கார். அதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.






      Dinamalar
      Follow us