sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு


UPDATED : பிப் 15, 2024 05:18 PM

ADDED : பிப் 15, 2024 04:57 PM

Google News

UPDATED : பிப் 15, 2024 05:18 PM ADDED : பிப் 15, 2024 04:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'காங்கிரசுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ எந்த கவலையும் இன்றி சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்திருக்கிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவீதம் குறைந்திருப்பதாக நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுக.,வின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையுமின்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை. இன்று, டெல்டா விவசாயிகள் 40 சதவீத குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக - காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

75% நிதி மத்திய அரசு கொடுத்தது

சென்னையில் நடைபெற்ற காக்கிச்சட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கியுள்ளது. ஆட்சியாளர்கள் பொய் சொல்கின்றனர். மத்திய அரசு வழங்கிய நிதியின்படி, ரூ.10,600 கொடுக்க வேண்டும், ஆனால் ரூ.6000 தான் கொடுக்கப்பட்டது. வெள்ள நிவாரணத் தொகையில் வெறும் 25 சதவீதம் தான் தமிழக அரசு கொடுத்தது; மீதி 75 சதவீத நிதியும் மத்திய அரசு கொடுத்தது. இவ்வாறு அவர ்பேசினார்.








      Dinamalar
      Follow us