sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

/

முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

5


ADDED : ஆக 14, 2025 03:53 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:53 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''திருப்பரங்குன்றம் மலை வழக்கில், முருக பக்தர்கள் முதுகில் தி.மு.க., அரசு குத்தி விட்டது'' என ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:



திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை, மதுரை ஐகோர்ட் கிளை விசாரிக்கிறது. அதில், தி.மு.க., அரசின் காவல்துறை, 'மலையில் ஆடு, கோழி பலியிடுவது காலங்காலமான வழக்கம்; நெல்லிதோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை இல்லை' என அப்பட்டமான பொய்யை கோர்ட்டில் கூறி, முருக பக்தர்களின் முதுகில் குத்தியுள்ளது,

மதுரை கலெக்டர் மற்றும் தி.மு.க., அரசு சார்பிலான வாதங்களில், 'திருப்பரங்குன்றம் மலை, நீண்ட காலமாக சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்படுகிறது; ஆடு, கோழி பலியிட்டால், தீட்டு என்பது மனித சமூகத்துக்கு எதிரானது. 18ம் படி கருப்பண்ணசாமிக்கு பலியிட்டு தான் வழிபடுகின்றனர்'' என, அபத்தமான சிண்டு முடிக்கும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

ஆங்கிலேய ஆட்சியிலேயே, மலை முழுதும் கோவிலுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க., அரசு, பொய் வாதங்களை முன்வைத்து, கோவிலின் புனிதத்தை கெடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

ஹிந்து அறநிலையத்துறை சார்பில், வலுவான வாதங்களை முன்வைத்து, கோவிலுக்கு ஆதரவாக உள்ள, முந்தைய தீர்ப்புகளை, எடுத்துரைக்க வேண்டும். மலையில் தீபம் ஏற்ற கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனே, நடைமுறைப்படுத்த வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு, தி.மு.க., அரசு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us