தி.மு.க.,வில் நேர்காணல்: பன்னீர்செல்வம் பங்கேற்பு; கனிமொழியை அழைக்காதது ஏன்?
தி.மு.க.,வில் நேர்காணல்: பன்னீர்செல்வம் பங்கேற்பு; கனிமொழியை அழைக்காதது ஏன்?
UPDATED : மார் 19, 2026 07:52 AM
ADDED : மார் 19, 2026 04:40 AM

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு, தி.மு.க.,வில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 750 பேர் பங்கேற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட விரும்பி மனு அளித்தோரை, சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் செய்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
இரண்டாம் நாளான நேற்று துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் - போடி, சபாநாயகர் அப்பாவு - ராதாபுரம், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்செந்துார், கீதா ஜீவன் - துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட 750 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி முடித்துள்ளார்.

