sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

/

ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

2


ADDED : டிச 10, 2025 07:45 PM

Google News

2

ADDED : டிச 10, 2025 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை. ஏற்கனவே, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளரின் மேல் பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், தற்போது ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் பெயரை போலீசார் இடைச்செருகலாக இணைத்திருப்பதாக அறிகிறேன்.

தொடர்ந்து திமுக அரசின் தகிடுதத்தங்களை பொதுவெளியில் தனது சவுக்கு மீடியா மூலம் உரக்கப் பேசி வரும் சவுக்கு சங்கரை கைது செய்து முடக்குவதற்காகவே இந்த வேலையை போலீசார் செய்துள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன்.

தேர்தல் வரும் முன் தங்களுக்கு எதிரான அனைத்து ஜனநாயக குரல்களையும் இந்த அரசு முடக்கிவிடலாம் என நினைக்கலாம். ஜனநாயக களத்தில் மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேர்தலோடு திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்பதே நிதர்சனம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us