sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

/

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

30


ADDED : ஜன 02, 2025 11:08 AM

Google News

ADDED : ஜன 02, 2025 11:08 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தி.மு.க,,வினரே காரணம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி ஆளும் தி.மு.க., அரசை விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டிற்கு தி.மு.க.,வினரே காரணம் என்றும், நாளை மதுரையில் இருந்து சென்னை வரை பா.ஜ.,வினர் நீதி கேட்பு பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்கப்படும் என்று கூறுவதும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது தி.மு.க., தரப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட தி.மு.க., நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது.

இன்னும் ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.

தி.மு.க., அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், நாளை (ஜன.,03) மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us