sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

/

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

63


ADDED : மார் 18, 2025 02:38 PM

Google News

ADDED : மார் 18, 2025 02:38 PM

63


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான் என தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சின் வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சையாக பேசிய வீடியோவை அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தா.மோ.அன்பரசன், 'ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறான்.. எங்கு இருக்கிறான். ஹிந்தி படிச்சவன் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான்.



விளையாட்டு சொல்லவில்லை. இது உண்மை. இங்கு பானிபூரி விற்கிறான். கொத்து வேலை செய்கிறான். நாமும் ஹிந்தியை படித்தால் வட நாட்டில் போய் பானி பூரி தான் செய்யணும்' என பேசியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: வட மாநிலத்தை சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளை இழிவுபடுத்துவதில் தி.மு.க., அமைச்சர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் தமிழ் கலாசாரத்தையும் மறந்து விடுகிறார்கள்.

11ம் வகுப்பு தேர்ச்சி

தி.மு.க., அமைச்சர் அன்பரசன் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், மிகவும் மோசமான தமிழ் புலமை கொண்டவர், மேலும் தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சராக உள்ளார். தேசிய கல்விக் கொள்கை, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முந்தைய கல்விக் கொள்கைகளைப் போல அல்ல.

3ம் மொழி

அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பது பற்றியது, தாய்மொழி (தமிழ்) கற்பித்தல் மொழியாக வலியுறுத்துவது மற்றும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் மொழியை கற்பிக்க வழிவகுக்கிறது. தமிழக மக்கள் இதை உணர்ந்துள்ளனர், மேலும் தி.மு.க., வெறுப்பு பிரசாரம் செய்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us