sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

50


ADDED : ஜூலை 09, 2025 06:59 AM

Google News

50

ADDED : ஜூலை 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: சோளிங்கர் நகராட்சி தலைவி, தக்கான் தீர்த்த குளம் அருகே ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை, வருவாய் துறையினர் இடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, சோளிங்கர் நகராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் அசோகன், தி.மு.க.,வில் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை அருகே, அரசுக்கு சொந்தமான சாலை புறம்போக்கு புலம் எண்: 645/ 2ஏ என்ற இடத்தில், 3,135 சதுரஅடி பரப்பளவை ஆக்கிரமித்து, நகராட்சி தலைவி தமிழ்ச்செல்வி, இரண்டு அடுக்கு கட்டடத்தை கட்டி வருகிறார்.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி கமிஷனர் நந்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.

இந்த இடத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய். சம்பவ இடத்தில், சோளிங்கர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us