ADDED : பிப் 17, 2025 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்,: ''ஊழல் குறித்த, 'தி.மு.க.,பைல்ஸ் - 3' விரைவில் வெளியாக போகிறது,'' என, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் பேசினார்.
பெண்ணாடத்தில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு 43,000 கோடி ரூபாயை ஒரே தவணையில் வழங்கி உள்ளது. அந்த நிதி எங்கே?
மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இதுகண்டிக்கத்தக்கது. வரும் 2026, தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், மகளிர் உரிமை தொகை 2,000 ஆக உயர்த்திகொடுக்கப்படும். ஊழல் குறித்த, 'தி.மு.க., பைல்ஸ் - 3' விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

